Posts

1321-1330

                                                               ஊடலுவகை குறள் எண்: 1321 இல்லை தவறவர்க்கு ஆயினும் ஊடுதல் வல்லது அவர்அளிக்கு மாறு. உரை : அவரிடம் தவறு ஒன்றும் இல்லையானலும், அவரோடு ஊடுதல், அவர் நம்மேல் மிகுதியாக அன்பு செலுத்துமாறு செய்ய வல்லது. குறள் எண்: 1322 ஊடலின் தோன்றும் சிறுதுனி நல்லளி வாடினும் பாடு பெறும்.  உரை : ஊடுதலால் உண்டாகின்ற சிறிய துன்பம், காதலர் செய்கின்ற நல்ல அன்பு வாடிவிடக் காரணமாக இருந்தாலும் பெருமை பெறும். குறள் எண்: 1323 புலத்தலின் புத்தேள்நாடு உண்டோ நிலத்தொடு நீரியைந் தன்னார் அகத்து. உரை : நிலத்தோடு நீர் பொருந்தி கலந்தாற் போன்ற அன்புடைய காதலரிடத்தில் ஊடுவதை விட இன்பம் தருகின்ற தேவருலம் இருக்கின்றதோ? குறள் எண்: 1324 புல்லி விடாஅப் புலவியுள் தோன்றுமென் உள்ளம் உடைக்கும் படை. உரை : காதலரைத் தழுவிக்கொண்டு விடாமலிருப்பதற்கு காரணமான ஊடலுள், என்னுடைய உள்ளத்தை உடைக்க வல்ல படை தோன்றுகிறது. குறள் எண்: 1...

1311-1320

                                                                    புலவி நுணுக்கம் குறள் எண்: 1311 பெண்ணியலார் எல்லாரும் கண்ணின் பொதுஉண்பர்  நண்ணேன் பரத்தநின் மார்பு. உரை : பரத்தமை உடையாய்! பெண் தன்மை உடையவர் எல்லாரும் தம்தம் கண்களால் ‌பொதுப் பொருளாகக் கொண்டு நுகர்கின்றார்கள்; ஆகையால் உன் மார்பைப் பொருந்தேன். குறள் எண்: 1312 ஊடி இருந்தேமாத் தும்மினார் யாம்தம்மை  நீடுவாழ் கென்பாக் கறிந்து. உரை : காதலரோடு ஊடல் கொண்டிருந்தோமாக, யாம் தம்மை நெடுங்காலம் வாழ்க என்று வாய் திறந்து சொல்லுவோம் என நினைத்து அவர் தும்மினார். குறள் எண்: 1313 கோட்டுப்பூச் சூடினும் காயும் ஒருத்தியைக்  காட்டிய சூடினீர் என்று. உரை : கிளைகளில் மலர்ந்த மலர்களைச் சூடினாலும், நீர் இந்த அழகை யாரோ ஒருத்திக்கு காட்டுவதற்காகச் சூடினீர் என்று சினம் கொள்வாள். குறள் எண்: 1314 யாரினும் காதலம் என்றேனா ஊடினாள்  யாரினும் யாரினும் என்று. உரை :...

1301-1310

                                                                                     புலவி குறள் எண்: 1301 புல்லா திராஅப் புலத்தை அவர்உறும்  அல்லல்நோய் காண்கம் சிறிது. உரை : (ஊடும்போது அவர் அடைகின்ற) துன்ப நோயைச் சிறிது காண்போம்; அதற்காக அவரைத் தழுவாமலிருந்து பிணங்குவாயாக. குறள் எண்: 1302 உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிது  மிக்கற்றால் நீள விடல். உரை : உப்பு, உணவில் அளவோடு அமைந்திருப்பதைப் போன்றது ஊடல்; ஊடலை அளவு கடந்து நீட்டித்தல், அந்த உப்பு சிறிதளவு மிகுதியாக இருப்பதைப் போன்றது. குறள் எண்: 1303 அலந்தாரை அல்லல்நோய் செய்தற்றால் தம்மைப்  புலந்தாரைப் புல்லா விடல். உரை : தம்மோடு பிணங்கியவரை ஊடலுணர்த்தித் தழுவாமல் விடுதல், துன்பத்தால் வருந்தியவரை மேலும் துன்ப நோய் செய்து வரத்தினாற் போன்றது. குறள் எண்: 1304 ஊடி யவரை உணராமை வாடிய  வள்ளி முதலரிந் தற்று. உரை : பிணங...

1291-1300

                                                                     நெஞ்சொடுபுலத்தல் குறள் எண்: 1291 அவர்நெஞ்சு அவர்க்காதல் கண்டும் எவன்நெஞ்சே  நீஎமக்கு ஆகா தது. உரை : நெஞ்சே! அவருடைய நெஞ்சம் (நம்மை நினையாமல் நம்மிடம் வராமல்) அவர்க்குத் துணையாதலைக் கண்டும் நீ எமக்குத் துணையாகாதது ஏன்? குறள் எண்: 1292 உறாஅ தவர்க்கண்ட கண்ணும் அவரைச்  செறாஅரெனச் சேறியென் நெஞ்சு. உரை : என் நெஞசே! நம்மேல் அன்பு கொள்ளாத காதலரைக் கண்டபோதும், அவர் வெறுக்கமாட்டார் என்று எண்ணி அவரிடம் செல்கின்றாயே! குறள் எண்: 1293 கெட்டார்க்கு நட்டார்இல் என்பதோ நெஞ்சேநீ  பெட்டாங்கு அவர்பின் செலல்.  உரை : நெஞ்சே! நீ உன் விருப்பத்தின்படியே அவர் பின் செல்வதற்குக் காரணம், துன்பத்தால் அழிந்தவர்‌க்கு நண்பர் இல்லை என்னும் எண்ண‌மோ? குறள் எண்: 1294 இனிஅன்ன நின்னொடு சூழ்வார்யார் நெஞ்சே  துனிசெய்து துவ்வாய்காண் மற்று. உரை : நெஞ்‌சே! நீ ஊடலைச்...

1281-1290

                                                                      புணர்ச்சிவிதும்பல் குறள் எண்: 1281 உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்  கள்ளுக்கில் காமத்திற் குண்டு. உரை : நினைத்த அளவிலே களிப்படைதலும் கண்ட அளவிலே மகிழ்ச்சி அடைதலும் ஆகிய இந்த இருவகை தன்மையும் கள்ளுக்கு இல்‌லை; காமத்திற்கு உண்டு. குறள் எண்: 1282 தினைத்துணையும் ஊடாமை வேண்டும் பனைத்துணையும்  காமம் நிறைய வரின். உரை : காமம் பனையளவாக நிறைய வரும்போது காதலரோடு தினையளவாகச் சிறிதேனும் ஊடல் கொள்ளாமல் இருக்க வேண்டும். குறள் எண்: 1283 பேணாது பெட்பவே செய்யினும் கொண்கனைக்  காணா தமையல கண்.  உரை : என்னை விரும்பாமல் புறக்கணித்துத் தனக்கு விருப்பமானவற்றையே செய்து ஒழுகினாலும், என்னுடைய கண்கள் காதலனைக் காணாமல் பொருந்தவில்லை. குறள் எண்: 1284 ஊடற்கண் சென்றேன்மன் தோழி அதுமறந்து  கூடற்கண் சென்றதுஎன் னெஞ்சு. உரை : தோழி! யான் அவரோடு ஊடுவதற்காகச் ...

1271-1280

                                                        குறிப்பறிவுறுத்தல் குறள் எண்: 1271 கரப்பினுங் கையிகந் தொல்லாநின் உண்கண்  உரைக்கல் உறுவதொன் றுண்டு. உரை : நீ சொல்லாமல் மறைத்தாலும் நிற்காமல் உன்னைக் கடந்து உன்னுடைய கண்கள் எனக்குச் சொல்லக் கூடிய செய்தி ஒன்று இருக்கிறது. குறள் எண்: 1272 கண்ணிறைந்த காரிகைக் காம்பேர்தோட் பேதைக்குப்  பெண்நிறைந்த நீர்மை பெரிது. உரை : கண் நிறைந்த அழகும் மூங்கில் போன்ற தோளும் உடைய என் காதலிக்குப் பெண்மைத்தன்மை நிறைந்து விளங்கும் இயல்பு மிகுதியாக உள்ளது. குறள் எண்: 1273 மணியில் திகழ்தரு நூல்போல் மடந்தை  அணியில் திகழ்வதொன்று உண்டு. உரை : (கோத்த) மணியினுள் விளங்கும் நூலைப் போல் என் காதலியின் அழகினுள் விளங்குவதான குறிப்பு ஒன்று இருக்கின்றது. குறள் எண்: 1274 முகைமொக்குள் உள்ளது நாற்றம்போல் பேதை  நகைமொக்குள் உள்ளதொன் றுண்டு. உரை : அரும்பு தோன்றும்போது அடங்கியிருக்கும் மணத்தைப் போல், காதலியின் புன்முறுவல...

1261-1270

                                                        அவர்வயின்விதும்பல் குறள் எண்: 1261 வாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற  நாளொற்றித் தேய்ந்த விரல். உரை : என் கண்களும் அவர் வரும் வழியைப் பார்த்துப் பார்த்து ஒளி இழந்து அழகு கெட்டன; விரல்களும் அவர் சென்ற நாட்களைக் குறித்துத் தொட்டுத் தொட்டுத் தேய்ந்தன. குறள் எண்: 1262 இலங்கிழாய் இன்று மறப்பின்என் தோள்மேல்  கலங்கழியும் காரிகை நீத்து. உரை : தோழி! காதலரின் பிரிவால்துன்புற்று வருந்துகின்ற இன்றும் அவரை மறந்து விட்டால், அழகு கெட்டு என் தோள் மேல் அணிந்துள்ள அணிகள் கழலுமாறு நேரும். குறள் எண்: 1263 உரன்நசைஇ உள்ளம் துணையாகச் சென்றார்  வரல்நசைஇ இன்னும் உளேன். உரை : வெற்றியை விரும்பி ஊக்கமே துணையாகக் கொண்டு வெளிநாட்டுக்குச் சென்ற காதலர், திரும்பி வருதலைக் காண விரும்பியே இன்னும் யான் உயிரோடு இருக்கின்றேன். குறள் எண்: 1264 கூடிய காமம் பிரிந்தார் வரவுள்ளிக்  கோடுகொ டேறுமென் நெஞ்சு. உரை ...

1251-1260

                                                                    நிறையழிதல் குறள் எண்: 1251 காமக் கணிச்சி உடைக்கும் நிறையென்னும்  நாணுத்தாழ் வீழ்த்த கதவு. உரை : நாணம் என்னும் தாழ்ப்பாள் பொருந்திய நிறை என்று சொல்லப்படும் கதவை காமம் ஆகிய கோடாலி உடைத்து விடுகிறதே. குறள் எண்: 1252 காமம் எனவொன்றோ கண்ணின்றென் நெஞ்சத்தை  யாமத்தும் ஆளும் தொழில். உரை : காமம் என்று சொல்லப்படுகின்ற ஒன்று கண்ணோட்டம் இல்லாதது. அது என் நெஞ்சத்தை நள்ளிரவில் ஏவல் கொண்டு ஆள்கிறது. குறள் எண்: 1253 மறைப்பேன்மன் காமத்தை யானோ குறிப்பின்றித்  தும்மல்போல் தோன்றி விடும். உரை : யான் காமத்தை என்னுள்‌ளே மறைக்க முயல்வேன்; ஆனால் அதுவே என் குறிப்பின்படி நிற்காமல் தும்மல் போல் தானே வெளிப்பட்டு விடுகிறது. குறள் எண்: 1254 நிறையுடையேன் என்பேன்மன் யானோஎன் காமம்  மறையிறந்து மன்று படும். உரை : யான் இதுவரையில் நிறையோடிருப்பதாக எண்ணிக கொண்டிருந்தே...

1241-1250

                                                                    நெஞ்சொடுகிளத்தல் குறள் எண்: 1241 நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்தொன்றும்  எவ்வநோய் தீர்க்கும் மருந்து. உரை : நெஞ்சே! (காதலால் வளர்ந்த) இத் துன்ப நோயைத் தீர்க்கும் மருந்து ஏதாவது ஒன்றை நீ நினைத்துப் பார்த்து எனக்குச் சொல்ல மாட்டாயோ? குறள் எண்: 1242 காதல் அவரிலர் ஆகநீ நோவது  பேதைமை வாழியென் நெஞ்சு. உரை : என் நெஞ்சே! வாழ்க! அவர் நம்மிடம் காதல் இல்லாதவராக இருக்க, நீ மட்டும் அவரை நினைந்து வருந்துவது உன் அறியாமையே! குறள் எண்: 1243 இருந்துள்ளி என்பரிதல் நெஞ்சே பரிந்துள்ளல்  பைதல்நோய் செய்தார்கண் இல். உரை : நெஞ்சே (என்னுடன்) இருந்து அவரை நினைந்து வருந்துவது ஏன்? இந்தத் துன்பநோயை உண்டாக்கியவரிடம் இவ்வாறு அன்பு கொண்டு நினைக்கும் தன்மை இல்லையே! குறள் எண்: 1244 கண்ணும் கொளச்சேறி நெஞ்சே இவையென்னைத்  தின்னும் அவர்க்காணல் உற்று. உரை : நெஞ்சே! ...

1231-1240

                                                            உறுப்புநலனழிதல் குறள் எண்: 1231 சிறுமை நமக்கொழியச் சேட்சென்றார் உள்ளி  நறுமலர் நாணின கண். உரை : இத்துன்பத்தை நமக்கு விட்டு விட்டுத் தொலைவில் உள்ள நாட்டுக்குச் சென்ற காதலரை நினைந்து அழுதமையால் கண்கள் அழகு இழந்து நறுமலர்களுக்கு நாணி விட்டன. குறள் எண்: 1232 நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும்  பசந்து பனிவாரும் கண். உரை : பசலை நிறம் அடைந்து நீர் சொரியும் கண்கள், நாம் விரும்பிய காதலர் நமக்கு அன்பு செய்யாத தன்மையைப் (பிறர்க்குச்) சொல்வன போல் உள்ளன. குறள் எண்: 1233 தணந்தமை சால அறிவிப்ப போலும்  மணந்தநாள் வீங்கிய தோள். உரை : கூடியிருந்த காலத்தில் மகிழ்ந்து பூரித்திருந்த தோள்கள், (இப்போது மெலிந்தும்) காதலருடைய பிரிவை நன்றாக அறிவிப்பவை போல் உள்ளன. குறள் எண்: 1234 பணைநீங்கிப் பைந்தொடி சோரும் துணைநீங்கித்  தொல்கவின் வாடிய தோள். உரை : துணைவர் விட்டு நீங்கியதால் பழைய அழகு கெட்...

1221-1230

                                                          பொழுதுகண்டிரங்கல் குறள் எண்: 1221 மாலையோ அல்லை மணந்தார் உயிருண்ணும்  வேலைநீ வாழி பொழுது. உரை : பொழுதே! நீ மாலைக்காலம் அல்ல; (காதலரோடு கூடியிருந்து பிறகு பிரிந்து வாழும்) மகளிரின் உயிரை உண்ணும் முடிவுக் காலமாக இருக்கினறாய்! குறள் எண்: 1222 புன்கண்ணை வாழி மருள்மாலை எம்கேள்போல்  வன்கண்ண தோநின் துணை. உரை : மயங்கிய மாலைப்‌பொழுதே! நீயும் எம்மைப்போல் துன்பப்படுகின்‌றாயே! உன் துணையும் எம் காதலர் போல் இரக்கம் அற்றதோ? குறள் எண்: 1223 பனிஅரும்பிப் பைதல்கொள் மாலை துனிஅரும்பித்  துன்பம் வளர வரும். உரை : பனி தோன்றிப் பசந்த நிறம் கொண்ட மாலைப் பொழுது எனக்கு வருத்தம் ஏற்பட்டுத் துன்பம் மேன்மேலும் வளரும்படியாக வருகின்றது. குறள் எண்: 1224 காதலர் இல்வழி மாலை கொலைக்களத்து  ஏதிலர் போல வரும்.  உரை : காதலர் இல்லாத இப்போது, கொலை செய்யும் இடத்தில் பகைவர் வருவது போல் மாலைப்பொழுது (என...

1211-1220

                                                        கனவுநிலையுரைத்தல் குறள் எண்: 1213 நனவினால் நல்கா தவரைக் கனவினால்  காண்டலின் உண்டென் உயிர். உரை : நனவில் வந்து அன்பு செய்யாத காதலரைக் கனவில் காண்பதால்தான் என்னுடைய உயிர் இன்னும் நீங்காமல் உள்ளதாகின்றது. குறள் எண்: 1214 கனவினான் உண்டாகும் காமம் நனவினான்  நல்காரை நாடித் தரற்கு. உரை : நனவில் வந்து அன்பு செய்யாத காதலரைத் தேடி அழைத்துக் கொண்டு வருவதற்காகக் கனவில் அவரைப் பற்றிய காதல் நிகழ்ச்சிகள் உண்டாகின்றன. குறள் எண்: 1215 நனவினால் கண்டதூஉம் ஆங்கே கனவுந்தான்  கண்ட பொழுதே இனிது. உரை : முன்பு நனவில் கண்ட இன்பமும் அப்பொழுது மட்டும் இனிதாயிற்று; இப்‌பொழுது காணும் கனவும் கண்ட பொழுது மட்டுமே இன்பமாக உள்ளது. குறள் எண்: 1216 நனவென ஒன்றில்லை ஆயின் கனவினால்  காதலர் நீங்கலர் மன். உரை : நனவு என்று சொல்லப்படுகின்ற ஒன்று இல்லாதிருக்குமானால், கனவில் வந்த காதலர் என்னை விட்டுப் பிரியாமலே இரு...

1201-1210

                                                            நினைந்தவர்புலம்பல் குறள் எண்: 1201 உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால்  கள்ளினும் காமம் இனிது. உரை : நினைத்தாலும் தீராத பெரிய மகிழ்ச்சியைச் செய்தலால் (உண்டபோது மட்டும் மகிழ்ச்சி தரும்) கள்ளை விட காமம் இன்பமானதாகும். குறள் எண்: 1202 எனைத்தொனறு ஏனிதேகாண் காமம்தாம் வீழ்வார்  நினைப்ப வருவதொன்று ஏல். உரை : தாம் விரும்புகின்ற காதலர் தம்மை நினைத்தலும் பிரிவால் வரக்கூடிய துன்பம் இல்லாமல் போகின்றது. அதனால் காமம் எவ்வளவாயினும் இன்பம் தருவதே ஆகும். குறள் எண்: 1203 நினைப்பவர் போன்று நினையார்கொல் தும்மல்  சினைப்பது போன்று கெடும். உரை : தும்மல் வருவது போலிருந்து வாராமல் அடங்குகின்றதே! என் காதலர் என்னை நினைப்பவர் போலிருந்து நினையாமல் விடுகின்றாரோ? குறள் எண்: 1204 யாமும் உளேங்கொல் அவர்நெஞ்சத்து எந்நெஞ்சத்து  ஓஒ உளரே அவர். உரை : எம்முடைய நெஞ்சில் காதலராகிய அவர் இருக்கின்றாரே! ...

1191-1200

                                                                 தனிப்படர்மிகுதி குறள் எண்: 1191 தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரே  காமத்துக் காழில் கனி. உரை : தாம் விரும்பும் காதலர் தம்மை விரும்புகின்ற பேறு பெற்றவர், காதல் வாழ்க்கையின் பயனாகிய விதை இல்லாத பழத்தைப் பெற்றவரே ஆவார். குறள் எண்: 1192 வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு  வீழ்வார் அளிக்கும் அளி. உரை : தம்மை விரும்புகின்றவர்க்குக் காதலர் அளிக்கும் அன்பு, உயிர் வாழ்கினறவர்க்கு மேகம் மழை பெய்து காப்பாற்றுதலைப் போன்றது. குறள் எண்: 1193 வீழுநர் வீழப் படுவார்க்கு அமையுமே  வாழுநம் என்னும் செருக்கு. உரை : காதலரால் விரும்பப்படுகின்றவர்க்கும் (பிரிவுத் துன்பம் இருந்தாலும்) மீண்டும் வந்தபின் வாழ்வோம் என்று இருக்கும் செருக்குத் தகும். குறள் எண்: 1194 வீழப் படுவார் கெழீஇயிலர் தாம்வீழ்வார்  வீழப் படாஅர் எனின். உரை : தாம் விரும்பும் காதலரால் விர...

1181-1190

                                                         பசப்புறுபருவரல் குறள் எண்: 1181 நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்தவென் பண்பியார்க்கு உரைக்கோ பிற. உரை : விரும்பிய காதலர்க்கு அன்று பிரிவை உடன்பட்டேன்; பிரிந்தபின் பசலை உற்ற என் தன்மையை வேறு யார்க்குச் சென்று சொல்வேன்? குறள் எண்: 1182 அவர்தந்தார் என்னும் தகையால் இவர்தந்தென்  மேனிமேல் ஊரும் பசப்பு. உரை : அந்தக் காதலர் உண்டாக்கினார் என்னும் பெருமிதத்தோடு இந்தப் பசலை நிறம் என்னுடைய மேனிமேல் ஏறி ஊர்ந்து பரவி வருகிறது. குறள் எண்: 1183 சாயலும் நாணும் அவர்கொண்டார் கைம்மாறா  நோயும் பசலையும் தந்து. உரை : காம நோயையும் பசலை நிறத்தையும் எனக்குக் கைம்மாறாக ‌‌கொடுத்து விட்டு, என் சாயலையும் நாணத்தையும் அவர் என்னிடமிருந்து பெற்றுக் கொண்டார். குறள் எண்: 1184 உள்ளுவன் மன்யான் உரைப்பது அவர்திறமால்  கள்ளம் பிறவோ பசப்பு. உரை : யான் அவருடைய நல்லியல்புகளை நினைக்கின்றேன்; யான் உரைப்பதும் அவற்...

1171-1180

                                                                    கண்விதுப்பழிதல் குறள் எண்: 1171 கண்தாம் கலுழ்வ தெவன்கொலோ தண்டாநோய்  தாம்காட்ட யாம்கண் டது. உரை : தீராத இக்காமநோய், கண்கள் காட்ட யாம் கண்டதால் விளைந்தது; அவ்வாறிருக்க, காட்டிய கண்கள், இன்று அன்பு கொண்டு உணராமல் துன்பத்தால் வருந்துவது ஏன்? குறள் எண்: 1172 தெரிந்துணரா நோக்கிய உண்கண் பரிந்துணராப்  பைதல் உழப்பது எவன். உரை : ஆராய்ந்து உணராமல் அன்று நோக்கிக் காதல் கொண்ட கண்கள், இன்று அன்பு கொண்டு உணராமல் துன்பத்தால் வருந்துவது ஏன்? குறள் எண்: 1173 கதுமெனத் தாநோக்கித் தாமே கலுழும்  இதுநகத் தக்க துடைத்து. உரை : அன்று காதலரைக் கண்கள் தாமே விரைந்து நோக்கி இன்று தாமே அழுகின்றன; இது நகைக்கத்தக்க தன்மை உடையது. குறள் எண்: 1174 பெயலாற்றா நீருலந்த உண்கண் உயலாற்றா  உய்வில்நோய் என்கண் நிறுத்து. உரை : என் கண்கள், தப்பிப் பிழைக்க முடியாத தீராத காமநோயை...

1161-1170

                                                                  படர்மெலிந்திரங்கல் குறள் எண்: 1161 மறைப்பேன்மன் யானிஃதோ நோயை இறைப்பவர்க்கு ஊற்றுநீர் போல மிகும். உரை : இக் காமநோயைப் பிறர் அறியாமல் யான் மறைப்பேன், ஆனால் இது இறைப்பவர்க்கு ஊற்று நீர் மிகுவது போல் மிகுகின்றது. குறள் எண்: 1162 கரத்தலும் ஆற்றேன்இந் நோயைநோய் செய்தார்க்கு  உரைத்தலும் நாணுத் தரும். உரை : இக் காமநோயைப் பிறர் அறியாமல் முற்றிலும் மறைக்கவும் முடியவில்லை, நோய் செய்த காதலர்க்குச் சொல்வதும் நாணம் தருகின்றது. குறள் எண்: 1163 காமமும் நாணும் உயிர்காவாத் தூங்கும்என்  நோனா உடம்பின் அகத்து. உரை : துன்பத்தைப் பொருக்காமல் வருந்துகின்ற என் உடம்பினிடத்தில் உயிரே காவடித்தண்டாகக் கொண்டு காமநோயும் நாணமும் இருப்பக்கமாக தொங்குகின்றன. குறள் எண்: 1164 காமக் கடல்மன்னும் உண்டே அதுநீந்தும்  ஏமப் புணைமன்னும் இல். உரை : காமநோயாகிய கடல் இருக்கின்றது. ஆனால் அதை நீந...

1151-1160

                                                              பிரிவாற்றாமை குறள் எண்: 1151 செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின்  வல்வரவு வாழ்வார்க் குரை. உரை : பிரிந்து செல்லாத நிலைமை இருந்தால் எனக்குச் சொல், பிரிந்து சென்று விரைந்து வருதலைப் பற்றியானால் அதுவரையில் உயிர்வாழ வல்லவர்க்குச் சொல். குறள் எண்: 1152 இன்கண் உடைத்தவர் பார்வல் பிரிவஞ்சும்  புன்கண் உடைத்தால் புணர்வு. உரை : அவருடைய பார்வை முன்பு இன்பம் உடையதாக இருந்தது, இப்போது அவருடைய கூட்டம் பிரிவுக்கு அஞ்சுகின்ற துன்பம் உடையதாக இருக்கின்றது. குறள் எண்: 1153 அரிதரோ தேற்றம் அறிவுடையார் கண்ணும்  பிரிவோ ரிடத்துண்மை யான். உரை : அறிவுடைய காதலரிடத்தும் பிரிவு ஒரு காலத்தில் உள்ள படியால் அவர் பிரியேன் என்று சொல்லும் உறுதி மொழியை நம்பித் தெளிவது அரிது. குறள் எண்: 1154 அளித்தஞ்சல் என்றவர் நீப்பின் தெளித்தசொல்  தேறியார்க்கு உண்டோ தவறு. உரை : அருள் மிகுந்தவராய் அஞ்ச வேண்...

1141-1150

                                                                         அலரறிவுறுத்தல் குறள் எண்: 1141 அலரெழ ஆருயிர் நிற்கும் அதனைப்  பலரறியார் பாக்கியத் தால். உரை : (எம் காதலைப் பற்றி) அலர் எழுவதால் அறிய உயிர் போகாமல் நிற்கின்றது, எம் நல்வினைப் பயனால் பலரும் அறியாமலிருக்கின்றனர். குறள் எண்: 1142 மலரன்ன கண்ணாள் அருமை அறியாது  அலரெமக்கு ஈந்ததிவ் வூர். உரை : மலர் போன்ற கண்ணை உடைய இவளுடைய அருமை அறியாமல், இந்த ஊரார் எளியவளாகக் கருதி அலர் கூறி எமக்கு உதவி செய்தனர். குறள் எண்: 1143 உறாஅதோ ஊரறிந்த கெளவை அதனைப்  பெறாஅது பெற்றன்ன நீர்த்து. உரை : ஊரார் எல்லோரும் அறிந்துள்ள அலர் நமக்குப் பொருந்தாதோ, (பொருந்தும்) அந்த அலர் பெறமுடியாமலிருந்து பெற்றார் போன்ற நன்மை உடையதாக இருக்கின்றது. குறள் எண்: 1144 கவ்வையால் கவ்விது காமம் அதுவின்றேல்  தவ்வென்னும் தன்மை இழந்து. உரை : எம் காமம் ஊரார் சொல்லுகின்ற அ...

1131-1140

                                                              நாணுத்துறவுரைத்தல் குறள் எண்: 1131 காமம் உழந்து வருந்தினார்க்கு ஏமம்  மடலல்லது இல்லை வலி. உரை : காதல் நிறைவேற முடியாமல் வருந்தும் காதலர்க்கு மடல் ஏறுதலைத் தவிர வேறு பலம் இல்லை. குறள் எண்: 1132 நோனா உடம்பும் உயிரும் மடலேறும்  நாணினை நீக்கி நிறுத்து. உரை : (காதலின் பிரிவால் ஆகிய துன்பத்தைப்) பொறுக்காத என் உடம்பும் உயிரும், நாணத்தை நீக்கி நிறுத்தி விட்டு மடலூரத் துணிந்தன. குறள் எண்: 1133 நாணொடு நல்லாண்மை பண்டுடையேன் இன்றுடையேன்  காமுற்றார் ஏறும் மடல். உரை : நாணமும் நல்ல ஆண்மையும் முன்பு பெற்றிருந்தேன், (காதலியை பிரிந்து வருந்துகின்ற) இப்போது காமம் மிக்கவர் ஏறும் மடலையே உடையேன். குறள் எண்: 1134 காமக் கடும்புனல் உய்க்கும் நாணொடு  நல்லாண்மை என்னும் புணை. உரை : நாணமும் நல்ல ஆண்மையுமாகிய தோணிகளைக் காமம் என்னும் கடுமையான வெள்ளம் அடித்துக் கொண்டு போய் விடுகின்றன. ...

1121-1130

குறள் எண்: 1121 பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி  வாலெயிறு ஊறிய நீர். உரை : மென்மையான மொழிகளைப் பேசு கின்ற இவளுடைய தூய பற்களில் ஊறிய நீர் பாலுடன் தேனைக் கலந்தாற் போன்றதாகும். குறள் எண்: 1122 உடம்பொடு உயிரிடை என்னமற் றன்ன  மடந்தையொடு எம்மிடை நட்பு. உரை : இம் மடந்தையோடு எம்மிடையே உள்ள நட்பு முறைகள், உடம்போடு உயிர்க்கு உள்ள தொடர்புகள், எத்தன்மையானவையோ அத்தன்மையானவை. குறள் 1123: கருமணியிற்பாவாய்நீபோதாயாம்வீழும் திருநுதற்குஇல்லைஇடம். என் கண்ணின் கருமணியில் உள்ள பாவையே நீ போய் விடு, யாம் விரும்புகின்ற இவளுக்கு என் கண்ணில் இருக்க இடம் இல்லையே! கலைஞர்உரை: நான்விரும்புகின்றஅழகிக்குஎன்கண்ணிலேயேஇடம்கொடுப்பதற்காகஎன்கண்ணின்கருமணியில்உள்ளபாவையே! அவளுக்குஇடமளித்துவிட்டுநீபோய்விடு!. மு.வஉரை: என்கண்ணின்கருமணியில்உள்ளபாவையேநீபோய்விடு, யாம்விரும்புகின்றஇவளுக்குஎன்கண்ணில்இருக்கஇடம்இல்லையே!. சாலமன்பாப்பையாஉரை: என்கருமணிக்குள்இருக்கும்பாவையே! நீஅதைவிட்டுப்போய்விடு; நான்விரும்பும்என்மனைவிக்குஎன்கண்ணுக்குள்இருக்கஇடம்போதவில்லை. பரிமேலழகர்உரை: (இடந்தலைப்பாட்டின்கண்தலைமகள்நீக்கத்துச்சொல்லியது.) கருமணியிற்ப...

1101-1110

                                                                                  புணர்ச்சிமகிழ்தல் குறள் எண்: 1101 கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்  ஒண்தொடி கண்ணே உள. உரை : கண்டும் கேட்டும் உண்டும் முகர்ந்தும் உற்றும் அறிகின்ற ஐந்து புலன்களாகிய இன்பங்களும் ஒளி பொருந்திய வளையல் அணிந்த இவளிடத்தில் உள்ளன. குறள் எண்: 1102 பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை  தன்நோய்க்குத் தானே மருந்து. உரை : நோய்களுக்கு மருந்து வேறு பொருள்களாக இருக்கின்றன, ஆனால் அணிகலன் அணிந்த இவளால் வளர்ந்த நோய்க்கு இவளே மருந்தாக இருக்கின்றாள். குறள் எண்: 1103 தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல்  தாமரைக் கண்ணான் உலகு. உரை : தாமரைக் கண்ணனுடைய உலகம், தாம் விரும்பும் காதலியரின் மெல்லிய தோள்களில் துயிலும் துயில் போல் இனிமை உடையதோ? குறள் எண்: 1104 நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும்...

1111-1120

                                                                 நலம்புனைந்துரைத்தல் குறள் எண்: 1111 நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும்  மென்னீரள் யாம்வீழ் பவள். உரை : அனிச்சப்பூவே நல்ல மென்மை தன்மை பெற்றிறுக்கின்றாய், நீ வாழ்க, யாம் விரும்பும் காதலி உன்னை விட மெல்லியத் தன்மை கொண்டவள். குறள் எண்: 1112 மலர்காணின் மையாத்தி நெஞ்சே இவள்கண்  பலர்காணும் பூவொக்கும் என்று. உரை : நெஞ்சமே! இவளுடைய கண்கள் பலரும் காண்கின்ற மலர்களை ஒத்திருக்கின்றன, என்று நினைத்து ஒத்த மலர்களைக் கண்டால் நீ மயங்குகின்றாய். குறள் எண்: 1113 முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம்  வேலுண்கண் வேய்த்தோ ளவட்கு. உரை : மூங்கில் போன்ற தோளை உடைய இவளுக்குத் தளிரே மேன், முத்தே பல், இயற்கை மணமே மணம், வேலே மை உண்ட கண். குறள் எண்: 1114 காணின் குவளை கவிழ்ந்து நிலன்நோக்கும்  மாணிழை கண்ணொவ்வேம் என்று. உரை : குவளை மலர்கள் காணும் தன்மைப் பெற்றுக் கண்டால், இவளுட...

1091-1100

                                                                            குறிப்பறிதல் குறள் எண்: 1091 இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு  நோய்நோக்கொன் றந்நோய் மருந்து. உரை : இவளுடைய மை தீட்டிய கண்களில் உள்ளது இருவகைப்பட்ட நோக்கமாகும், அவற்றுள் ஒரு நோக்கம் நோய் செய்யும் நோக்கம், மற்றொன்று அந் நோய்க்கு மருந்தாகும்.  குறள் எண்: 1092 கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில்  செம்பாகம் அன்று பெரிது. உரை : கண்ணால் என்னை நோக்கிக் களவு கொள்கின்ற சுருங்கிய பார்வை காமத்தில் நேர்பாதி அன்று, அதைவிடப் பெரிய பகுதியாகும். குறள் எண்: 1093 நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள்  யாப்பினுள் அட்டிய நீர். உரை : என்னை நோக்கினாள், யான் கண்டதும் நோக்கித் தலைகுனிந்தால், அது அவள் வளர்க்கும் அன்பினுள் வார்க்கின்ற நீராகும். குறள் எண்: 1094 யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்  தான்நோக்கி மெல்ல...

1081-1090

தகையணங்குறுத்தல் குறள் எண்: 1081 அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை  மாதர்கொல் மாலும்என் நெஞ்சு. உரை : தெய்வப் பெண்ணோ! மயிலோ, கனமான குழை அணிந்த மனிதப் பெண்ணோ, என் நெஞ்சம் மயங்குகின்றதே. குறள் எண்: 1082 நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு  தானைக்கொண் டன்ன துடைத்து. உரை : நோக்கிய அவள் பார்வைக்கு எதிரே நோக்குதல் தானே தாக்கி வருத்தும் அணங்கு, ஒரு சேனையையும் கொண்டு வந்து தாக்கினாற் போன்றது. குறள் எண்: 1083 பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன்  பெண்டகையால் பேரமர்க் கட்டு. உரை : எமன் என்று சொல்லப்படுவதை முன்பு அறியேன், இப்பொழுது கண்டறிந்தேன், அது பெண் தனமையுடன் போர் செய்யும் பெரிய கண்களை உடையது. குறள் எண்: 1084 கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்டகைப்  பேதைக்கு அமர்த்தன கண். உரை : பெண்தன்மை உடைய இந்தப் பேதைக்குக் கண்கள் கண்டவரின் உயிரை உண்ணும் தோற்றத்தோடு கூடி ஒன்றோடொன்று மாறுபட்டிருந்தன. குறள் எண்: 1085 கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்  நோக்கமிம் மூன்றும் உடைத்து. உரை : எமனோ. கண்ணோ, பெண்மானோ, இந்த இளம் பெண்ணின் பார்வை இந்த மூன்றன் தன்மையும் உடையதாக இருக்கிறது. க...

1071-1080

                                                                                            கயமை குறள் எண்: 1071 மக்களே போல்வர் கயவர் அவரன்ன  ஒப்பாரி யாங்கண்ட தில். உரை : மக்களே போல் இருப்பார் கயவர், அவர் மக்களை ஒத்திருப்பது போன்ற ஒப்புமை வேறு எந்த இருவகைப் பொருள்களிடத்திலும் யாம் கண்டதில்லை. குறள் எண்: 1072 நன்றறி வாரிற் கயவர் திருவுடையர்  நெஞ்சத்து அவலம் இலர். உரை : நன்மை அறிந்தவரை விடக் கயவரே நல்ல பேறு உடையவர், ஏன் என்றால், கயவர் தம் நெஞ்சில் எதைப் பற்றியும் கவலை இல்லாதவர். குறள் எண்: 1073 தேவர் அனையர் கயவர் அவருந்தாம்  மேவன செய்தொழுக லான். உரை : கயவரும் தேவரைப் போல் தான் விரும்புகின்றவைகளைச் செய்து மனம் போன போக்கில் நடத்தலால், கயவர் தேவரைப் போன்றவர். குறள் எண்: 1074 அகப்பட்டி ஆவாரைக் காணின் அவரின்...

1061-1070

                                                                                இரவச்சம் குறள் எண்: 1061 கரவாது உவந்தீயும் கண்ணன்னார் கண்ணும்  இரவாமை கோடி உறும். உரை : உள்ளதை மறைக்காமல் உள்ளம் மகிழ்ந்து கொடுக்கும் கண்போல் சிறந்தவரிடத்திலும் சென்று இரவாமலிருப்பதே கோடி மடங்கு நல்லதாகும். குறள் 1062: இரந்தும்உயிர்வாழ்தல்வேண்டின்பரந்து கெடுகஉலகியற்றியான். உலகத்தை படைத்தவன் உலகில் சிலர் இரந்தும் உயிர்வாழுமாறு ஏற்படுத்தியிருந்தால், அவன் இரப்பவரைப் போல் எங்கும் அலைந்து கெடுவானாக. கலைஞர்உரை: பிச்சையெடுத்துதான்சிலர்உயிர்வாழவேண்டும்என்றநிலையிருந்தால்இந்தஉலகத்தைப்படைத்தவனாகச்சொல்லப்படுபவனும்கெட்டொழிந்துதிரியட்டும். மு.வஉரை: உலகத்தைபடைத்தவன்உலகில்சிலர்இரந்தும்உயிர்வாழுமாறுஏற்படுத்தியிருந்தால், அவன்இரப்பவரைப்போல்எங்கும்அலைந்துகெடுவானாக. சாலமன்பாப்பையாஉரை: பிச்சைஎடுத்துத்தான்உயிர்வாழவேண்டும்என்றநில...

1051-1060

                                                                        இரவு குறள் எண்: 1051 இரக்க இரத்தக்கார்க் காணின் கரப்பின்  அவர்பழி தம்பழி அன்று. உரை : இரந்து கேட்க தக்கவரைக் கண்டால் அவனிடம் இரக்க வேண்டும், அவர் இல்லை என்று ஒளிப்பாரானால் அது அவர்க்கு பழி, தமக்கு பழி அன்று. குறள் எண்: 1052 இன்பம் ஒருவற்கு இரத்தல் இரந்தவை  துன்பம் உறாஅ வரின். உரை : இரந்து கேட்ட பொருள் துன்பமுறாமல் கிடைக்குமானால், அவ்வாறு இரத்தலும் இன்பம் என்று சொல்லத் தக்கதாகும். குறள் எண்: 1053 கரப்பிலா நெஞ்சின் கடனறிவார் முன்நின்று  இரப்புமோ ரேஎர் உடைத்து. உரை: ஒளிப்பு இல்லாத நெஞ்சும், கடைமையுணர்ச்சியும், உள்ளவரின் முன்னே நின்று இரந்து பொருள் கேட்பதும் ஓர் அழகு உடையதாகும். குறள் எண்: 1054 இரத்தலும் ஈதலே போலும் கரத்தல்  கனவிலும் தேற்றாதார் மாட்டு. உரை : உள்ளதை மறைத்துக் கூறும் தன்மையைக் கனவிலும் அறியாதவரிடத்தில் இரந்து...

1041-1050

 நல்குரவு குறள் எண்: 1041 இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின்  இன்மையே இன்னா தது. உரை : வறுமையைப் போல் துன்பமானது எது என்று கேட்டால், வறுமையைப் போல் துன்பமானது வறுமை ஒன்றே ஆகும். குறள் எண்: 1042 இன்மை எனவொரு பாவி மறுமையும்  இம்மையும் இன்றி வரும். உரை : வறுமை என்று சொல்லப்படும் பாவி ஒருவனை நெருங்கினால், அவனுக்கு மறுமையின்பமும், இன்மையின்பமும் இல்லாமற் போகும் நிலைமை வரும். குறள் எண்: 1043 தொல்வரவும் தோலும் கெடுக்கும் தொகையாக  நல்குரவு என்னும் நசை. உரை : வறுமை என்று சொல்லப்படும் ஆசைநிலை ஒருவனைப் பற்றினால், அவனுடைய பழைமையானக் குடிப் பண்பையும் புகழையும் ஒரு சேரக் கெடுக்கும். குறள் எண்: 1044 இற்பிறந்தார் கண்ணேயும் இன்மை இளிவந்த  சொற்பிறக்கும் சோர்வு தரும். உரை : வறுமை என்பது, நல்ல குடியிற் பிறந்தவரிடத்திலும் இழிவு தரும் சொல் பிறப்பதற்குக் காரணமான சோர்வை உண்டாக்கி விடும். குறள் எண்: 1045 நல்குரவு என்னும் இடும்பையுள் பல்குரைத்  துன்பங்கள் சென்று படும். உரை : வறுமை என்று சொல்லப்படும் துன்ப நிலையினுள் பலவகையாக வேறுபட்டுள்ள எல்லாத் துன்பங்களும் சென்று விளைந்திடும். ...

1021-1030

  குறள் 1021: கருமம்செயஒருவன்கைதூவேன்என்னும் பெருமையின்பீடுடையதுஇல். குடிப் பெருமைக்கு உரிய கடமையைச் செய்வதற்குச் சோர்வடைய மாட்டேன் என்று ஒருவன் முயலும் பெருமையைப் போல மேம்பாடானது வேறொன்றும் இல்லை. கலைஞர்உரை: உரியகடமையைச்செய்வதில்சோர்வுகாணாமல்எவனொருவன்முயற்சிகளைவிடாமல்மேற்கொள்கிறானோஅந்தப்பெருமைக்குமேலாகவேறொருபெருமைகிடையாது. மு.வஉரை: குடிப்பெருமைக்குஉரியகடமையைச்செய்வதற்குச்சோர்வடையமாட்டேன்என்றுஒருவன்முயலும்பெருமையைப்போலமேம்பாடானதுவேறொன்றும்இல்லை. சாலமன்பாப்பையாஉரை: வீட்டையும்நாட்டையும்மேன்மைஅடையச்செயல்செய்யாமல்விடமாட்டேன்எனமனஉறுதிகொள்ளும்பெருமையைக்காட்டிலும்மேலானபெருமைவேறுஇல்லை. Translation: Who says 'I'll do my work, nor slack my hand', His greatness, clothed with dignity supreme, shall stand. Explanation: There is no higher greatness than that of one saying. I will not cease in my effort (to raise my family). குறள் எண்: 1022 ஆள்வினையும் ஆன்ற அறிவும் எனஇரண்டின் நீள்வினையால் நீளும் குடி. உரை : முயற்சி நிறைந்த அறிவு என்று சொல்லப்படும் இரண்டினையும் உடைய இடைவிடாத செயலால் ஒரு...